“இதோ, எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” என்று கிறிஸ்து சொல்லுகிறார். மனிதனுக்கு புதிய இருதயம் கிடைப்பது உண்மையிலேயே ஒரு பெரிய அதிசயம்!. உடல் உறுப்புகள் சில மீண்டும் வளரலாம்; மரங்கள் வெட்டப்பட்ட கிளைகளை மீண்டும் முளைப்பிக்கலாம். ஆனால், புதிய இருதயத்தை யார் தர முடியும்?
சார்ல்ஸ் ஸ்பர்ஜன் கூறுவது போல, மறுபிறப்பு என்பது சீரமைப்பு அல்ல; அது மறுசிருஷ்டி. கிறிஸ்து பழைய இருதயத்தை ஒட்டிப்பழுது பார்க்கவில்லை, அதை புதிதாகவே மாற்றுகிறார். சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இரட்சகர் இயேசு, நம்முள் புதிய ஜீவனையும் புதிய வாழ்வையும் வைக்கிறார்.
இந்த புதிய இருதயம் புதிய வாஞ்சைகளை உருவாக்கி எழுப்புகிறது. தீய பழக்கத்திற்கு பதிலாக பரிசுத்தம், கீழ்படியாமைக்கு பதிலாக கீழ்ப்படிதல். தேவன் இருதயத்தின் அச்சாணியையே மாற்றுவதால், பழைய பாவ இழுப்புகள் தங்களின் அதிகாரத்தை இழக்கின்றன.
கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் வருவது இயல்பு. ஆனால் அது முடிவு அல்ல. சிலுவையை நோக்கி பாருங்கள். விசுவாசத்தோடு சொல்லுங்கள், “நான் இப்போது இருப்பதுபோலவே வருகிறேன், தேவனுடைய பரிசுத்த ஆட்டுக்குட்டியே.”
“என்னை புதிய சிருஷ்டியாக்குவீராக” என்று இருதயமாரச் சொல்லுங்கள். ஜெபத்திற்கு பரலோகம் பதிலளிக்கிறது. அதுவே மறுபிறப்பின் உண்மையான அதிசயம்.
(சார்லஸ் ஸ்பரிஜனின் -3 - நிமிட தியான புத்தகத்திலிருந்து ).
“மனிதனில் தேவன் செய்கிற மிகப்பெரிய அதிசயம் மறுபிறப்பே.” (C. H. Spurgeon)
கர்த்தாவே, உமது அதிசய வல்லமைக்கு நன்றி. நீர் எனக்கு புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் தந்து, உமது சித்தத்தை செய்ய என்னை வலிமைப்படுத்தியுள்ளீர். உம்மில் புதிதாக ஆரம்பிக்க எனக்கு எல்லாம் இருக்கிறது. ஆமென்.
நீங்கள் பழுது பார்க்கப்படவில்லை, புதிதாக மறுபடியும் பிறந்துள்ளீர்கள். எல்லாவற்றையும் புதிதாக்கும் இரட்சகரில் மகிழுங்கள். உங்களை புதிய சிருஷ்டியாக்கிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். இன்று அவருடைய புதுப்பிக்கும் கிருபையில் முன்னே நடவுங்கள்.