வேடிக்கை – அளவோடு இருந்தால் ஆசீர்வாதம்

ஆடியோ/வீடியோ

மனப்பாட வசனம்

“சிரிப்பதற்குக் காலமும், அழுவதற்குக் காலமும் உண்டு.” — பிரசங்கி 3:4

இன்றைய தியானம்

சிரிப்பும் வேடிக்கையும் தேவன் நமக்குத் தந்த நல்ல ஈவுகளே. மகிழ்ச்சியுடன் வாழவும், மன அழுத்தங்களை நீக்கவும் தேவன் நம்மை சிரிக்கக் கூடியவர்களாகப்படைத்தார். ஆரோக்கியமான சிரிப்பை தேவன் வெறுப்பதில்லை; அதனை அவர் அனுமதிக்கிறார்.
ஆனால் வேடிக்கை அளவுக்கு மிஞ்சும்போது, அது ஆவிக்குரிய உணர்வையும் தேவனுடைய வல்லமையையும் மெதுவாக வற்றச் செய்யும். குறிப்பாக, ஆவிக்குரிய பொறுப்புகள், ஜெப நேரங்கள், ஊழிய ஆயத்தங்கள் போன்ற காலங்களில், அளவுக்கு அதிகமான சிரிப்பு மற்றும் தகாத பேச்சுகள், நம்முடைய ஆவிக்குரிய அபிஷேகத்தை இழக்கச் செய்யலாம்.
நம்மைக்காட்டிலும் சாத்தான் இதை நன்றாக அறிவான். அதனால் தான், தேவனுடைய வல்லமை மிக அவசியமாக தேவைப்படும் தருணத்திற்கு முன்பே, நம்மை தகாத வேடிக்கைகளில் சிக்கவைத்து, ஜெபத்தின் பலனை வீணாக்க முயல்கிறான். பல மணி நேரங்கள் ஜெபித்து பெற்ற ஆவியானவரின் பிரசன்னம், சில நிமிடங்களில் கவனக்குறைவான தேவையில்லாத வேடிக்கை பேச்சுகளால் இழக்க நேரிடலாம்.
எனவே, சிரிப்புக்கும் வேடிக்கைக்கும் இடமும் காலமும் அளவும் மிகவும் அவசியம். பரிசுத்தத்தையும் பக்தியையும் இழந்து விடாமல் அளவுடன் காக்கப்படும் வேடிக்கையே, ஆசீர்வாதமான வேடிக்கை.

இன்றைய மேற்கோள்

“ஆவிக்குரிய உணர்வு என்பது அஜாக்கிரதையால் கணத்தில் இழக்கப்பட முடியும், ஆனால் அதை மீண்டும் பெற வெகுநேரம் தேவைப்படும்.” - A. W. Tozer

பரிந்துரைக்கப்படும் புத்தகம்

Knowing Scripture

by R. C. Sproul

"-"

— பக்கம்: 34
Read More

ஜெபம்

கர்த்தாவே, எங்கள் மகிழ்ச்சியும் சிரிப்பும் உம்முடைய சித்தத்திற்குள் இருக்க உதவும். எங்கள் ஆவிக்குரிய உணர்வை காக்கும் ஞானத்தை எங்களுக்கு அளிப்பீராக. ஆமென்.

உங்களுக்கு ஒரு வார்த்தை

வேடிக்கை உங்களை கட்டுப்படுத்த வேண்டாம்; நீங்கள் வேடிக்கையை கட்டுப்படுத்துங்கள். கர்த்தர் உங்கள் சிந்தனைகளையும், வார்த்தைகளையும், நடையையும் காத்தருளி, அவருடைய அபிஷேகத்தில் நிலைத்திருக்க கிருபை அளிப்பாராக.

ஆசிரியர்

Pr. Maria Joseph

919243183231