அன்பு என்பது தேவன் பேசும் மொழியும், படைப்புகள் உணரும் தாளமும், வார்த்தைகள் இல்லாமலே மனித ஆத்துமா புரிந்துகொள்ளும் ஆச்சரியமான வல்லமையாகும். அன்பே தடை சுவர்களை உடைக்கிறது, கண்ணீரை துடைக்கிறது, காயங்களை கட்டுகிறது, பகை சிதறடித்ததை மீண்டும் ஒன்று சேர்க்கிறது. பெங்குயின் ஒரு கடல் பிராணி, இச்சிறு உயிரினம் வருடம் தோறும் 5000 கிலோமீட்டர் நீந்தி வந்து தன் உயிரை சில வருடங்களுக்கு முன் காப்பாற்றிய மனிதருக்கு நன்றி தெரிவிக்கும்படி ஆண்டுதோறும் வருகிறதாம். தன்னுயிரை காப்பாற்றிய அவர் மேல் வைத்த அன்பால் அந்த பெங்குயின் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து வருகிறது. அன்பின் வல்லமை எத்தகையது பாருங்கள். அந்த ஐந்து அறிவு ஜீவராசியின் வியக்கத்தகு அன்பு எவ்வளவு உண்மையானது. நம் ஆத்துமாவை நித்தியமரணத்திலிருந்து இரட்சிக்க தன் இன்னுயிரை தந்த தேவனை எவ்வளவாய் நாம் நாட வேண்டும். நம்மை இரட்சித்த இரட்சகரை நோக்கி நாம் எவ்வளவு அன்புடன் விரைந்து ஓட வேண்டும்!. இயேசு அன்பை கற்பிக்க வரவில்லை, அன்பை வெளிப்படுத்தி காண்பிக்க வந்தார். ஒருவரும் தொடாத குஷ்டரோகிகளை தம் அன்புக்கரங்களால் தொட்டார், சுகமாக்கினார். மனமுடைந்தவர்களை தேற்றினார், பாவிகளை மன்னித்தார், மறக்கப்பட்டவர்களை, தள்ளுண்டவர்களை சேர்த்துக்கொண்டார். உங்கள் வார்த்தைகளை உலகம் தவறாகப் புரிந்துக்கொள்ளலாம்; ஆனால் கிறிஸ்துவின் மெய் அன்பை ஒருவரும் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது. கிறிஸ்துவின் ஊழியரே!
இன்று உங்கள் கிரியைகள் உங்கள் குரலைவிட சத்தமாகப் பிரசங்கிக்கட்டும், ஏனெனில் அன்பின் மொழி எல்லா மனதாலும் நிச்சயமாக ஒரு நாள் புரிந்துகொள்ளப்படும்.
“அன்பிருக்கிற இடத்தில் தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது.” மகாத்மா காந்தி
by பரமானந்தம் ஐயர்
Read More"கிறிஸ்துவின் மரணம் நமது ஜீவியத்தை முற்றிலும் மாற்றும் தேவ பலமாயிருக்கிறது. அவருடைய சிலுவையில் வெளிப்பட்ட தேவ கிருபையும் தேவ அன்பும் பாவிகளின் இருதயங்களை நொறுக்கி அவர்களைப் பரிசுத்தவான்களாக்கும் வல்லமையுள்ளதாயிருக்கிறது. 'என்னிடத்தில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்' என்று சொன்ன பவுல் தமது ஜீவியத்தில் ஆச்சரியமான மாறுதலை அடைந்தார்."
— 130
கர்த்தாவே, உமது அன்பின் வல்லமையால் என் இதயத்தை நிரப்பும். இன்று என் வாழ்வும், என் வார்த்தைகளும் உம் அன்புள்ள இதயத்தை ஒவ்வொருவரிடம் வெளிப்படுத்தட்டும். நான் உமது இரக்கத்தையும் கிருபையையும் வெளிப்படுத்தும் மெய்சாட்சியாக இருக்கச் செய்யும். ஆமென்.
கிறிஸ்துவின் அன்பு இன்று உங்களில் இருந்து பொங்கிப் பெருகட்டும்.
உங்கள் வாழ்க்கை கடின இதயங்களை தேவனுக்காக ஆதாயப்படுத்தும் ஒரு கருவியாக இருக்கட்டும்.