தீர்க்கரின் எல்லா உரைகளையும் நாம் விளங்கிக் கொள்வதில்லை. ஆயினும் அவை மகிழ்ச்சி அளிப்பவை என்று கருதுகிறோமே அல்லாமல் அவற்றைக் குறித்து கலக்கம் அடைவதில்லை. பிதாவின் ஆணையில் யாதொன்றும் அவர் பிள்ளையைக் கலக்கமடையச் செய்யக்கூடியதாய் இருக்க முடியாது.பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்பட்டாலும் உண்மையான விசுவாசி கறைப்படுத்தப்படாமல் இருப்பான். சுத்திகரிக்கப்பட்டு வெண்மையாக்கப்பட்டு புடமிடப்பட்டவராயிருப்பான். பூமி எரிந்து போனாலும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் மேல் அக்கினியின் வாசனை இராது. பூமியும்அதில் உள்ளவைகளும் அளிக்கப்படும்போது யேகோவா தமக்கு உரியவர்களைக் காப்பாற்றி விடுவிப்பார்.
நாம் பாதையை விட்டு விலகுகிறவர்களாயாவது பாதையில் அலைந்து திர்pந்து பொழுது போக்குகிறவர்களாயாவது இராமல் கடமையைச் செய்வதில் கண்ணும் கருத்தும் உள்ளவர்களாய்போராடுவதில் துணிவு மிக்கவர்களாய் துன்பத்தில் பொறுமை உள்ளவர்களாய் இருப்போமாக! முடிவு எப்படியும் வரும். அது வரை நாம் சரியான பாதையில் செல்வோமாக!
நமக்கு இளைப்பாறுதல் எப்படியும் கிடைக்கும். மற்றவையெல்லாம் ஊசலாடுபவையாக இருந்தாலும் நம் அஸ்திவாரம்உறுதியாய் நிலைத்திருக்கிறது. கடவுள் அவர் அன்பில் நிலைத்திருக்கிறார். ஆகையால் நாம் அதில் நிலைத்திருக்கிறோம். நம் சமாதானம் இப்போதும் எப்போதும் ஆறு போலிருக்கும். பரம கானானில் எப்படியும் நமக்கு ஓர் இடம் உண்டு. தானியேலைப் போல் உண்மையாகவும்தூய்மையாகவும் இருக்கத் தைரியம் காட்டுபவர்களுக்குத் தானியேலின் கடவுள் தகுந்த மதிப்பு அளிப்பார். எந்தச் சிங்கக்கூட்டமும் நமக்குக் கிடைக்கவிருக்கும் நன்மைகளைத் தடை செய்ய முடியாது.
சார்லஸ் ஸ்பர்ஜன்